உங்களுக்கு இருதய நோய் இருந்தால், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிரமான இதய நோய்களை தடுப்பதற்காக, இரத்தம் கட்டியெடுக்காமல் ஓடச் செய்யும் மருந்துகள் உண்டு. அதில் ஆஸ்பிரின் குறைந்த அளவில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பிரின் என்பது இரத்தப்பிளேட்லெட்டுகள் (platelets) ஒன்றிணைந்து இரத்தக் கட்டிகளை உருவாக்குவதை தடுக்கும் செயல்பாட்டை கொண்டது. இதனால் இரத்தம் சுதந்திரமாக ஓடும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுபோன்ற மருந்து பயன்படுத்தும் போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
புதிய ஆய்வின் முக்கியத் தகவல்கள்:
கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி என்பது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் உள்ள தடைகளை திறக்க சிறிய அறுவை சிகிச்சை. இதில் ஒரு சிறிய பலூன் ஊதப்பட்டு, குழாயை அகலமாக்கி, அதில் ஸ்டென்ட் (கட்டமைப்பு) வைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, இரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகாமல் தடுப்பதற்காக, இரண்டு வகை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன:
- ஆஸ்பிரின்
- P2Y12 தடுப்பான் (மற்றொரு வகை இரத்த உறைவு தடுப்பு மருந்து)
பல மாதங்கள் இந்த இரட்டை மருந்து சிகிச்சை தொடர்ந்த பிறகு, நோயாளிகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஆஸ்பிரின் மட்டும் எடுத்துக் கொள்வர். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இரட்டை மருந்து சிகிச்சை முடிந்த பிறகும் P2Y12 தடுப்பான் நீண்டகாலம் எடுத்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய இறப்பின் அபாயம் ஆஸ்பிரினை விட குறைவாகும் எனும் தகவல் கிடைத்துள்ளது.
ஆய்வுகளில் 16,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்றனர், அவர்களிடம் ஆஸ்பிரின் மற்றும் P2Y12 தடுப்பான் ஆகியவற்றின் விளைவுகளை ஆராய்ந்தனர். ஆய்வு முடிவில், P2Y12 தடுப்பான் மருந்து ஆஸ்பிரினுடன் ஒப்பிடும்போது, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய இறப்பு சம்பவங்களை 23% குறைத்து, இரத்தப்போக்கு போன்ற பெரிய பக்கவிளைவுகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆஸ்பிரின் சிகிச்சையால் யார் பயனடையலாம்? தினசரி குறைந்த அளவிலான (81 மில்லிகிராம்) ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும்போது, கீழ்க்கண்ட நோயாளிகள் அதிக நன்மை பெறுவர்:
நீரிழிவு நோய்
உயர் இரத்த அழுத்தம்
புகைப்பிடித்தல்
உயர் கொழுப்பு அளவுகள் (ஹைப்பர்லிபிடெமியா)
கரோனரி தமனி நோய்
புற தமனி நோய்
மாரடைப்பு அல்லது பக்கவாதம்
கவனிக்க வேண்டியவை: அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ள கூடாது. அதிக அளவு எடுத்தால் வயிற்று இரத்தப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆய்வுகள் 81 மில்லிகிராம் அளவு தினசரி எடுத்துக்கொள்ளும் போது பெரும்பாலும் பாதுகாப்பானதாகவும், அதிகரித்த அளவு ஆஸ்பிரின் உடல் மீது தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் கூறுகின்றன. எந்தவொரு மருந்தும் எடுத்துக்கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.
Read more: ஜிம்மிற்குச் செல்லாமல் வீட்டிலேயே 30 கிலோ எடையைக் குறைத்த இளம் பெண்.. சீக்ரெட் என்ன தெரியுமா..?