பாகிஸ்தான் தோல்வியை அடுத்து சோயிப் அக்தரின் இதயம் வெடிந்த குறியீட்டை டுவீட் செய்ததற்கு இந்திய வீரர் ஷமி ’’இது தான் கர்மா’’ என்று பதில்கொடுத்துள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. மெல்போர்னில் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டம் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படாததால் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
போட்டியில் பாகிஸ்தான் படு தோல்வியை சந்தித்த பின்னர் சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதயம் நொறுங்கியது போன்ற குறியீட்டை பதிவு செய்து தனது வருத்தத்தை தெரிவித்தார். இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷமி ’’மன்னிக்கவும், சகோதரரே இதுதான் கர்மா’’ என பதிலிட்டிருந்தார். இது வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.
டி20 உலக கோப்பையின் முக்கிய அங்கம் வகித்தவர் ஷமி. இவர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடிலெய்டு மைதானத்தில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது. நாக் அவுட் டை தவிர, ஷமி அற்புதமான போட்டியை விளையாடினர்.
அந்ததோல்விக்கு பின்னர் அக்தர் இந்தியாவை விமர்சித்தார். தற்போது இந்தியா யார் என்று தெளிவாகிவிட்டது. அரையிறுதிக்கு வருவது பெரிதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் அணியில் இடம்பெற தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டிருந்தார். தற்போதுஇந்தியா மிகக் குறைந்த புள்ளியில்தான் உள்ளது. ஐசிசிக்கு இந்தியா வரும் போது கேப்டன்சியை பார்க்க வேண்டும் என்று அக்தர் தனது யூடியூப் சேனலில் கூறினார்.
’’திடீரென ஷமியை அணியில் சேர்த்துள்ளனர். இநதிய அணியில் இடம்பெற ஷமிக்கு தகுதியில்லை. இறுதியில் யார் ஜெயிப்பார் என சொல்ல முடியாது. என குற்றச்சாட்டு வைத்தார். இங்கிலாந்துடன இந்தியா தோற்றதை கிண்டல் செய்தீர்களே இப்போது நீங்களும் தோற்றுவிட்டீர்களே என கேட்கும் வகையில் கர்மா என கூகுறிப்பிட்டுள்ளார் ஷமி.