’இதெல்லாம் எங்க ஸ்கூல்ல சகஜம்’..!! ’பிடிக்கலனா வேலையை விட்ரு’..!! பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் அசிசி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் நிக்சன் என்ற நபர் பாலியல் ரீதியாகவும், ஆபாசமாக பேசியும் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகி அந்தோணி சேவியரிடம் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார்.

ஆனால், அந்தோணி சேவியர் தொல்லை அளித்த நபருக்கு ஆதரவாக பேசியதுடன், இதெல்லாம் இப்பள்ளியில் சகஜம், விருப்பம் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று விடலாம், இது குறித்து வெளியில் கூறினால் நடப்பதே வேறு என மிரட்டியுள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்பதற்காக ஆசிரியை தனது உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டார். ஆனால், நிர்வாகம் தரப்பில் எவரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார், அந்த ஆசிரியையிடம் புகார் மனு பெற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

CHELLA

Next Post

தமிழகம் முழுவதும் இருக்கின்ற பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்…..! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு அடேங்கப்பா இதற்கு இத்தனை கோடியா…..?

Tue Jul 4 , 2023
தமிழகத்தில் ஒரு காலத்தில் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்தனர். ஆனால் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இதனை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது பள்ளிகளில் மதிய உணவு திட்டம் என்பது அவர் கொண்டு வந்தது தான். அதன் பிறகு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அந்தத் திட்டத்தை விரிவு படுத்தினார். இன்றளவும் அந்த திட்டம் மாணவர்களிடையேயும், பெற்றோர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல […]
Stalin 1

You May Like