இயக்குனர் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்காலிகமாக RC15 என்று அழைக்கப்பட்டது.. இந்நிலையில் ராம்சரணின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் தலைப்பு வெளியிட்டுள்ளது.. இதுதொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.. இப்படத்திற்கு, கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ராம் சரண் உண்மையிலேயே இந்திய சினிமாவின் கேம் சேஞ்சர்” என்று பதிவிட்டு வருகின்றனர்.. டைட்டில் அறிவிப்பு தங்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளதாகவும், தற்போது டீசருக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் தெரிவித்தனர். முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2021 இல் வெளியிடப்பட்டது.

270323054028 64212c4cedee1game changer

ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சுனில், நாசர், ரகுபாபு, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.. இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்கும் முதல் படம் இது தான்.. இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் போன்ற மிகப்பெரிய தமிழ் வெற்றிப்படங்களை கொடுத்த ஷங்கர், 2018ல் வெளியான 2.0 படத்திற்குப் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை.

கேம் சேஞ்சர் ஒரு அரசியல் த்ரில்லர் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.. இப்படம் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது.. ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். எனவே கேம் சேஞ்சர் படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. எனினும் படப்பிடிப்பு விரைவில் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது..

1newsnationuser1

Next Post

சட்டசபையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கும் கருப்பு உடையுடன் வந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்…..!

Mon Mar 27 , 2023
ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டிக்கும் விதமாக, நாடாளுமன்றத்துக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வருகை புரிந்தனர். அவர்கள் கூட்டாக நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். அதாவது மோடி என்ற பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, […]
tamil nadu mp 1

You May Like