1043 ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1,043 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 48 விற்பனையாளர்கள் 296 கட்டுனர் பணியிடங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 விற்பனையாளர் மற்றும் 160 கட்டுனர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 157 விற்பனையாளர் மற்றும் 21 கட்டுனர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 198 விற்பனையாளர்கள், 39 கட்டுனர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன.