#TNPSC: டிசம்பர்-21 நிருபர்களுக்கான தேர்வு, வெளியான முக்கிய அப்டேட்!!!

6 ஆங்கில நிருபர் பதவிகள் மற்றும் 3 தமிழ் நிருபர் பதவிகள் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 13-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை பெறப்பட்டன.


இந்த தேர்வு டிசம்பர் 21 அன்று சென்னை தேர்வு மையத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் நடைபெறும். கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். என்றும் ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தெரிவித்திருந்ததது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Newsnation_Admin

Next Post

குஜராத்தில் பயங்கரம்...! 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்...! விசாரணையில் அதிர்ச்சி...!

Wed Dec 14 , 2022
பெண் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பிறந்த குழந்தையை இரண்டு மாடி கட்டிடத்தின் கூரையில் இருந்து தூக்கி எறிந்து குற்ற சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் வசிக்கும் 20 வயதான இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எங்களிடம் கூறினார். இதில் அவர் கர்ப்பம் […]
images 2022 12 14T055714.938

You May Like