இன்று ஹோலி பண்டிகையும், மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகை என்பது, குளிர் காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் இரண்டு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஹோலி பண்டிகைக்காக புதுச்சேரி அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஜிப்மரில் இன்று மார்ச் 8ஆம் தேதி புதன்கிழமை வெளி நோயாளிகள் பிரிவும் இயங்காது. அதே நேரத்தில் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதே போல், இன்று பிற்பகல் வரை டெல்லி மெட்ரோ சேவையும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.