’51 வயது பெண்ணுக்கு இன்ஸ்டா காதலன் அனுப்பிய பரிசு’..!! ’கடைசில இப்படி ஆப்பு வைப்பான்னு தெரியாம போச்சே’..!!

மும்பையைச் சேர்ந்த 51 வயதான திருமணமான பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அலெக்ஸ் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, இருவரும் சமூக வலைதளம் மூலம் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இன்று காதலர் தினம் என்பதால், சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸ் அந்த பெண்ணிடம் “உங்களுக்கு விலை உயர்ந்த காதலர் தின பரிசை அனுப்புகிறேன். பரிசைப் பெற்றதும் நீங்கள் கட்டணமாக ரூ.66,000 செலுத்த வேண்டியது இருக்கும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு கூரியர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அனுமதிக்கப்பட்டதை விட பார்சல் அதிக எடை கொண்டதாக இருப்பதால் நீங்கள் கூடுதலாக ரூ.72 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த பணத்தையும் அந்த பெண் செலுத்தியுள்ளார்.

பின்னர், கூரியர் நிறுவனத்தின் பிரதிநிதி என்று தொடர்புகொண்ட நபர் ஒருவர், “பார்சலில் யூரோ பணம் உள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிக்க வைக்காமல் இருக்க ரூ.2.65 லட்சம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் மொத்தமாக ரூ.3.68 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனாலும், அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை அந்த பெண் உணர்ந்து கொண்டார். இந்நிலையில், அந்த பெண் மீண்டும் பணம் அனுப்ப மறுத்த நிலையில், அலெக்ஸ் போனில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். பணம் அனுப்பாவிட்டால் உனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 2 மர்ம நபர்கள் மீது மோசடி, தகவல் தொழில்நுட்ப மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

Wow..! இனி, இன்டர்நெட் இல்லாமலே டிஜிட்டல் பேமெண்ட் செய்யலாம்.. புதிய திட்டம் தொடக்கம்..

Tue Feb 14 , 2023
தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.. குறிப்பாக வங்கி தொடர்பான பணிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையும் குறைந்துவிட்டது.. இண்டெர்நெட் பேக்கிங், யுபிஐ ஆகிய முறைகளில் ஆன்லைனில் எளிதாக பண பரிமாற்றம் செய்ய முடிகிறது.. ஆனால் அதற்கு இணைய வசதி தேவை.. இந்நிலையில் இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC, ஆஃப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் திட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி […]

You May Like