இன்று கார்த்திகை அமாவாசை..!! இந்த விரத முறைகளை கடைபிடித்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..?

அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய பூஜை முறைகளை செய்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு வாழைப்பழம் அகத்துக்கீரை கொடுப்பது போன்றவையும் செய்யப்படுகிறது. மேலும், அந்த நாளில் குலதெய்வம் வழிபாடும் மேற்கொள்வது நல்லது. அப்படியான விசேஷமான இந்த அமாவாசை கார்த்திகை மாதத்தில் வருவதும் இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.

இன்று கார்த்திகை அமாவாசை..!! இந்த விரத முறைகளை கடைபிடித்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..?

இந்த மாதத்தில் இன்று காலை 6.35 மணிக்கு துவங்கிய அமாவாசை திதியில் இந்த விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு நோய் நொடிகள் அண்டாது. தீராத பிணிகள் தீர கார்த்திகை அமாவாசையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

இன்று கார்த்திகை அமாவாசை..!! இந்த விரத முறைகளை கடைபிடித்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..?

அதிகாலையிலேயே குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே மற்ற பூஜைகளை செய்ய வேண்டும். கார்த்திகை அமாவாசையான இன்று காலையிலோ அல்லது மாலையிலோ அன்னதானம் செய்வது நல்லது. பசு மாடுகளுக்கு பழம் அல்லது உணவு அளிப்பது நல்லது. அத்துடன் நம் முன்னோர்களுக்கு அமாவாசையன்று தர்ப்பணம் செய்வதும் சிறப்பு.

இன்று கார்த்திகை அமாவாசை..!! இந்த விரத முறைகளை கடைபிடித்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..?

அப்படி செய்வதினால் முன்னோர்கள் நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மேலும் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சுக சம்பத்துக்கள் ஆகியவை சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

CHELLA

Next Post

#Holiday..!! ராணிப்பேட்டையை ரவுண்ட் அடுக்கும் கனமழை..!! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

Wed Nov 23 , 2022
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் வடதமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை […]
rain school

You May Like