மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க இன்றை கடைசி நாள்…!

patta 2025

விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.


20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள 03.11.2017 வரை ஆறு மாத காலம் அவகாசம் வழங்கி ஆணை வெளியிட்டது. பின்னர் இந்தக் கால அவகாசம் 29.02.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இன்றி இணையவழி மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் அமையும் மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள மேலும் 12 மாத காலங்களுக்கு நீட்டிப்பு வழங்குமாறு அரசை கோரியுள்ளார்.

20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவிற்கும் வரன்முறைக்கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் விதி 2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடுகிறது. மேலும், இத்திட்டத்தில் இணைய வழி மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இயலும்.

Read more; உங்கள் பாஸ்வேர்ட் கசிந்துவிட்டால் உடனடியாக எச்சரிக்கும் கூகுள் அம்சம்!. எப்படி தெரியுமா?. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Vignesh

Next Post

TNPL 2025| 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த திருச்சி!. திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி அபாரம்!.

Mon Jun 30 , 2025
தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 8 அணிகளில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் கடைசி இடத்திற்கான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற அணிகள் இந்த தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்த […]
tnpl tiruchi play off 11zon

You May Like