தமிழர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் என்று சொன்னால் அவர்களின் மனதில் பல தமிழ் அறிஞர்கள் தோன்றலாம். அப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் தான் திருவள்ளுவர்.
இவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறை என்று சிறப்பு பெற்றிருக்கிறது.
1333 திருக்குறள்கள் மூலமாக மனித வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்றுக்கொடுத்து சென்றவர் தான் திருவள்ளுவர். பிரதமர் நரேந்திரமோடி உட்பட பல தலைவர்களும் தங்களுடைய உரைகளை ஆரம்பிக்கும்போது, இன்றளவும் கூட திருக்குறளை சுட்டிக்காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதத்தில் வருடம் தோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கிறது.
மறைமலை அடிகளாரின் தலைமையில் 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கடந்த 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் ஒன்றுகூடி தமிழர்களுக்கான ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர்ச்சியான ஆண்டு ஒன்றை பின்பற்றுவது எனவும், அதையே தமிழ் ஆண்டு என்றும், கொள்வது எனவும் திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 எனவும் முடிவு செய்தனர்.
அதனை கணக்கிட்டு திருவள்ளுவர் வருடம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் திருவள்ளுவர் பிறந்த வருடத்திற்கான சான்றிதழ்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. அவரை சமணர் எனவும், சைவர் எனவும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.
திருவள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி என்று குறிப்பிட்டு விழா எடுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த 1971 ஆம் வருட முதல் தை மாதம் 2ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பாக மரியாதை செலுத்தப்படும் என்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.