”தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும்”..!! வேல்முருகன் அதிரடி..!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் உள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை, ரவிக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த இந்த கூட்டணியை ஸ்டாலின் அமைத்து உள்ளதாகவும், சாதி மத வேறுபாடின்றி, சமூக மாற்றம் ஏற்பட விழுப்புரத்தில் பானை சின்னம் வெற்றி பெற வேண்டும் சாதிய சமூக ரீதியாக ஓட்டு அரசியல் பெற உள்ள கூட்டணியை அடித்து விரட்ட இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சாதிவாரி, சமூகநீதி என்று பேசக்கூடாது குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று கூறும் மருத்துவர் ராமதாஸ், பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு செயல்படுகிறார். இது தான் மாற்றம் முன்னேற்றமா? தமிழ்நாடு என்பது சமூகநீதி மண் சமத்துவ மண். இங்கு தேர்தல் அறிவித்தபின் மோடி 10 முறை வருகிறார். ராமதாஸ் திருமாவளவன் கைகளை பிடித்து இணைந்த கைகளை எந்த கொம்பனாலும் பிரிக்க பிடியாது என்று கூறினால் ஆதரிக்கிறார்கள். அதே கையை பிடித்து நான் கூறினால் பாமகவினர் எதிர்க்கிறார்கள். வன்னிய மக்கள் ஓட்டு போடாமல் எந்த தலைவர்களும் தமிழகத்தில் பதவிக்கு வர முடியாது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும். நிர்மலா சீதாராமணின் கணவர் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என அவரே தெரிவிப்பதாகவும் நவீன டிஜிட்டல் முறையில் பத்தாயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், நவீன முறையில் கொள்ளையடிக்கிற பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் ராணுவ ஆட்சியை கொண்டு வர துடிக்கிற சக்திகளுக்கும் சமூக நீதிக்காக போராடும் சக்திகளுக்குமான போர் நடைபெறுவதாக வேல்முருகன் தெரிவித்தார்.

Read More : செம குட் நியூஸ்..!! லைசென்ஸ் வாங்க இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீட்டிற்கே வந்துவிடும்..!!

Chella

Next Post

தல தோனி வரலாற்று சாதனை!… ஐபிஎல்லில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர்!

Mon Apr 15 , 2024
Dhoni record: மும்பை அணிக்கு எதிரான 29வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய தோனி வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2024 டி20 தொடரில் நேற்று இரவு […]

You May Like