கோர விபத்து…! இடிந்து விழுந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம்… 3 பேர் பலி…! மீட்பு பணி தீவிரம்…!

நேற்று இரவு 8 மணி அளவில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது‌. NDRF-SDRF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதிபடுத்தி உள்ளனர்.

காவல்துறை ஜவான்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதுவரை 3 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று உத்தரபிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் கூறினார். செய்தியாளர்களிடம் கூறினார்.

வசீர் ஹசன் சாலையில் ஏற்பட்ட இடிபாடு நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த, லக்னோ மாவட்ட ஆட்சியர் சூர்யபால் கங்வார், “இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே காயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

இரண்டே நாள் பொறுத்திருங்கள்...! அதிமுக பிரச்சனை குறித்து அண்ணாமலை சூசகம்...!

Wed Jan 25 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சக தலைவர் அண்ணாமலை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் காலம் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகான இடைத்தேர்தல்களில் 80% ஆளும்கட்சி தான் வென்றுள்ளது. ஆனால் பொதுத்தேர்தலில் தோற்றிருப்பார்கள்‌. இந்த ஒரு இடைத்தேர்தலால் எதுவும் மாறப்போவது இல்லை. […]

You May Like