தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கீழே தெரு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் என்பவரின் மகன் சிவசூர்யா (25) இந்த நிலையில், சிவ சூர்யாவும் சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகள் முத்துலட்சுமியும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சிவ சூர்யா அவபோது மது குடித்துவிட்டு வந்து முத்துலட்சுமி இடம் தகராறு ஈடுபட்டதாகவும் தெரிகிறது. ஆகவே மன வேதனையில் இருந்த முத்துலட்சுமி தன்னுடைய குடும்பத்தினரிடம் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறார். அதோடு, மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது புகார் வழங்கியிருக்கிறார் முத்துலட்சுமி.
இதனை அடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சிவ சூர்யா அடிக்கடி முத்துலட்சுமியின் சகோதரருக்கு தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு என்னுடைய மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க தெரிவித்து தொந்தரவு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில் தான் நேற்று வழக்கம் போல கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து தனியாக இருந்த சிவசூரியா மனைவியின் சகோதரருக்கு போன் செய்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை எடுத்து திடீரென்று சிவசூரியாவின் வீட்டிற்கு வந்த முத்துலட்சுமியின் சகோதரர் வெங்கடேசன், வீட்டில் தனியாக இருந்த சிவசூரியாவை அறிவாளால் சரமாரியாக விட்டிருக்கிறார். அதன் பிறகு வீட்டை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் சிவசூரியாவின் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது சிவசூரியா ரத்த வெள்ளத்தில் துளி துளித்து இருக்கிறார் ஆகவே அக்காமக்கத்தினர் மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலமாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிவ சூர்யாவின் உடலில் 18 இடங்களில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்ற வெங்கடேசனை சாத்தான்குளம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் அருள் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.