தூள்…! பெண்களுக்கு இலவச சேவை…! இரவு 10 முதல் மாலை 6 மணி வரை…! டிஜிபி அதிரடி உத்தரவு…!

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெண்கள்‌ பாதுகாப்புக்கென புதிய திட்டம்‌ ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல்‌ காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும்‌ பெண்கள்‌, காவல்துறையின்‌ உதவி எண்கள்‌ 1091, 112,044 23452365 & 044 28447701 ஆகியவற்றை அழைக்கலாம்‌.

காவல்‌ ரோந்து வாகனம்‌ நீங்கள்‌ இருக்கும்‌ இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச்‌ செல்லும்‌. அனைத்து நாள்களிலும்‌ இந்த சேவையை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ இந்த சேவை இலவசமாகும்‌ என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்

Vignesh

Next Post

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தேர்வாளராக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமனம்!

Wed Jun 21 , 2023
இந்திய அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக 45 வயது நிரம்பிய முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டைப் போன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கும் பிசிசிஐ அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, பெண்கள் கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வுக் குழுவின் நியமனங்களை பிசிசிஐ அறிவித்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக இந்திய […]

You May Like