“சிகரெட் கடன் கேட்டு தகராறு” வெறிப்பிடித்த இளைஞரால் பார்வையை இழந்த மளிகை கடைக்காரர்.!

மளிகை கடையில்  கடன்  பாக்கியை திருப்பி கேட்டதால் மளிகை கடைக்காரர் கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பீகார் மாநிலம் நாளந்தா அருகே உள்ள மெஹனூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜிதேந்திர குமார். தன் தந்தைக்கு உதவியாக அவரது மளிகை கடையை கவனித்து வந்தார். சம்பவம் நடந்த நாளன்று பக்கத்து கிராமத்தைச் சார்ந்த முராரி குமார் என்பவர் சிகரெட் வாங்குவதற்காக இவரது கடைக்கு வந்திருக்கிறார். முராரி குமார் ஏற்கனவே வாங்கிய பொருள்களுக்கு செலுத்த வேண்டிய தொகை  நிலுவையில் இருந்ததால் அதனை திருப்பி செலுத்தாமல் சிகரெட் தர மாட்டேன் என கண்டிப்புடன் கூறியிருக்கிறார் ஜிதேந்திர குமார். இதனால் ஆத்திரமடைந்த  முராரி குமார்  ஜிதேந்தரை மீறி  கடைக்குள்ளிருந்து சிகரெட்டை எடுக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த முராரி குமார்  கடையிலிருந்த கத்தியை எடுத்து ஜிதேந்தரின் இடது கண்ணில் பலமாக குத்தி விட்டு  தப்பிச் சென்றார். இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதேந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு  மாற்றப்பட்ட சிதேந்தர் குமாருக்கு இடது கண் பார்வை முற்றிலுமாக பறிபோனது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜிதேந்தர் குமாரின் தந்தை மெஹனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பிச்சென்ற முராரி குமாரை காவல்துறை வலை வீசி தேடி வருகிறது.

Baskar

Next Post

#கடலூர் : குடிநீர் தொட்டிக்குள் சடலம்..  பொறியியல் பட்டதாரி கொலையா? தற்கொலையா? போலிஸ் விசாரணை.!

Wed Feb 1 , 2023
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில்  இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக இருக்கிறது. அந்தத் தொட்டியிலிருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊர் மக்கள் குடிநீர் தொட்டியில் சோதனை செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் […]

You May Like