MAHARASTRA | அகல்யா நகராக மாறிய அஹமத் நகர்.!! மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்.!

MAHARASTRA: மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத் நகர்(AHMEDNAGAR) அஹல்யா நகர்(AHILYA NAGAR) என பெயர் மாற்ற அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 பிரிட்டிஷ் கால ரயில் நிலையங்களின் பெயரை மாற்றவும் மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவுக்கு முதல்வர் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா(MAHARASTRA) மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமையன்று அஹமத் நகரை(AHMEDNAGAR) அஹல்யா நகர் என பெயர் மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் பிரிட்டிஷ் காலத்தின் பெயர்களாக இருந்த 8 மும்பை ரயில் நிலையங்களின் பெயர்களை மறுபெயரிடவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், உட்டான் (பயந்தர்) மற்றும் விரார் (பால்கர்) இடையே கடல் இணைப்பை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் 2.5 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிரா பவன் கட்டுவதற்கு வாங்க அமைச்சரவை மேலும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பட்ஜெட் முன்மொழிவு ஏற்கனவே மகாராஷ்டிரா சட்டசபையின் முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில பட்ஜெட்டில் செய்யப்பட்டது.

Read More: Vijay | நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த பிரபல நடிகரின் மகன்..!! யாருன்னு தெரியுமா..?

Next Post

Record | ’யாரு சாமி இவரு’..!! 26 ஆண்டுகளில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியர்..!! எங்கு வேலை செய்கிறார் தெரியுமா..?

Wed Mar 13 , 2024
26 ஆண்டுகள் பணியில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியரின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே வேலைக்கு செல்பவர்களுக்கு வார இறுதி நாள் விடுமுறை எப்போது வரும் என்று தான் காத்துக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமின்றி, சமீப காலமாக வாரத்தின் விடுமுறை நாட்களை அதிகரிப்பது, வேலை நாட்களை குறைப்பது போன்ற விவாதம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில், ஊழியர் ஒருவர் தனது 26 ஆண்டுகள் பணி […]

You May Like