நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்த நிலையில் நம் வீட்டுக்கு மாதம் மாதம் தேவையான அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட 5 வகையான செலவினங்கள் கடந்த ஆண்டு எவ்வாறு இருந்தன என்பது குறித்து மும்பையை சேர்ந்த Axis my india எனும் அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
எதற்காக அதிக செலவு செய்யப்பட்டது? என்னக் காரணம்?
☞ வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கான செலவு கடந்த 2021 ஆம் ஆண்டைவிட 2022-ல் அதிகமாக உயர்ந்திருந்ததாக 73% மக்கள் தெரிவித்துள்ளனர்.
☞ மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான செலவு 2021 ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு உயர்ந்துவிட்டதாக 39% குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
☞ விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம்தான் காரணம் என 50% மக்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் எதை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள்?
☞ மொபைல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதாக 52% மக்கள் கருத்து.
☞ யூடியூப் பார்ப்பது அதிகரித்திருப்பதாக 25% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
☞ சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக்-தான் அதிகம் பயன்படுத்துவதாக 35% மக்கள் தெரிவித்துள்ளனர்.
வருங்காலத்தில் எதில் முதலீடு செய்வீர்கள்?
☞ இந்த ஆண்டு முதலீடுகளை எவ்வாறு திட்டமிடுவீர்கள் என்ற கேள்விக்கு மியூச்சுவல் ஃபண்டு, காப்பீடு, தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வோம் என 40% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
☞ குழந்தைகளின் படிப்புக்கு முதலீடு செய்வோம் என 34% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
☞ நிலம் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்வோம் என 16% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.