காதலர்கள் என நினைத்து அண்ணன் – தங்கையை மரத்தில் கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்!… மத்திய பிரதேசத்தில் கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என நினைத்து அண்ணன் – தங்கையை அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரமாக அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் காதலர்கள் என நினைத்து 2 பேரை அப்பகுதி மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கலாவதி மற்றும் ஞானவேல் என்று அடையாளம் காணப்பட்டது. அந்த பெண்ணிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த 6-ஆம் தேதி கணவர் ரமேஷ் வேலைக்கு சென்றிருந்ததார். அப்போது கலாவதியின் அண்ணன் அவரை பார்க்க கந்த்வா மாவட்டத்திற்கு வந்திருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காதலர்கள் என நினைத்து இருவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது கலாவதி, ஞானவேல் தனது சகோதரர் தான் என்று கூறியதை ஏற்க மக்கள், வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த தகவலையறிந்த கலாவதியின் கணவர் ரமேஷ், கிராம மக்களில் ஒருவரை தொடர்பு கொண்டு உடன் பிறந்தவர்கள் என்று கூறினார். இதனை அடுத்து ஞானவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

Kokila

Next Post

10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்! இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலை.யில் வேலை!... 200 பணியிடங்கள்!

Tue Apr 11 , 2023
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் (Indira Gandhi National Open University) காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் மொத்தமாக 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் […]

You May Like