டாக்சிக் ஆபீஸ்.. மேனேஜர் செய்த மோசமான காரியத்தால் வேலையை இழந்த ஐடி ஊழியர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Indian employee pakistan

இந்தியாவில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர், மேனேஜரின் மோசமான அணுகுமுறையால் மனஅழுத்தத்திற்குள் தள்ளப்பட்டு, இறுதியில் வேலை இழந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.


அந்த ஊழியர் ரெட்டிட் (Reddit) தளத்தில் பகிர்ந்த பதிவின்படி, அவர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் சிறந்த சம்பளம் காரணமாக அவர் புதிய நிறுவனத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாகவே இருந்தது. இந்திய மேனேஜரின் கீழ் பணிபுரிந்த அவர், தன் திறமையால் அவரை கவர்ந்தார். முக்கியமான பிராஜக்ட்களில் கூடுதல் நேரம் வேலை செய்ததற்காக பாராட்டுகளும், 10% ஊதிய உயர்வும் கிடைத்தது.

ஆனால் சில மாதங்களில் அந்த மேனேஜரின் நடத்தை முழுமையாக மாறிவிட்டது. சிறிய தவறுகளுக்கே பெரிய குற்றச்சாட்டுகள், புதிய முயற்சிகளை கேலி செய்தல், ஊதியம் குறித்த விமர்சனங்கள், ஓவர்டைம் ஊதியம் நிறுத்துதல் என டாக்சிக் சூழல் உருவாகியது. தொடர்ந்து நடந்த துன்புறுத்தலால், எனது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மூன்று மாதங்கள் அதை தாங்கியபின், ஒரு நாள் திடீரென்று ‘பெர்பாமன்ஸ் சரியில்லை’ எனச் சொல்லி, என்னை டிஸ்மிஸ் செய்தனர் எனவும் கூறியுள்ளார். நோட்டீஸ் பிரியட் முழுவதும் நம்பிக்கையுடன் பணியாற்றியும், மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டுகள் கிடைத்தபோதும், வேலை இழப்பிலிருந்து தப்ப முடியவில்லை. இதனால் அவர் சில மாதங்கள் ஓய்வெடுத்து, புதிய வேலை தேடத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் அதே நிறுவனத்தின் HR அதிகாரி அவரை தொடர்பு கொண்டு, மீண்டும் பணிக்கு வருமாறு கேட்டுள்ளார். மேலும், ஒரு சீனியர் மேனேஜரும் “இப்போது நிறுவனத்தின் வேலைச் சூழல் மாறிவிட்டது” என உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்த இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Read more: இந்த உணவை சாப்பிட்டால் இதயநோய், நீரிழிவு, உடல் பருமன் பிரச்சனைகள் வரும்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Toxic office.. IT employee loses job due to bad thing done by manager.. The twist at the end..!!

Next Post

"ஸ்லோ பாய்சன்"!. அடிக்கடி புரோட்டா, மைதானு சாப்பிடுறீங்களா?. எவ்வளவு பக்க விளைவுகள் தெரியுமா?.

Wed Oct 8 , 2025
இப்போதெல்லாம், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள், ஜங்க் புட்ஸ், தெருவோர உணவு மற்றும் துரித உணவுகளுக்கு அடிமையாகி, தினமும் வெளியில் இருந்து ஏதாவது ஒன்றை சாப்பிட ஆசைப்படுகிறார்கள். மோமோஸ், முட்டை மற்றும் சிக்கன் ரோல்ஸ், சமோசாக்கள், பாஸ்தா, பீட்சா, பர்கர்கள், ரொட்டி மற்றும் பலவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள், ஆனால் இந்த பொருட்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, மேலும் சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது ஆரோக்கியமற்றது. சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்க்கவும் […]
maida

You May Like