பிப்ரவரி 24 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து ட்ராய் அறிவிப்பு…! உடனே உங்க கருத்தை பதிவு செய்ய வேண்டும்..!

இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது. இதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.


கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களும், சங்கங்களும் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான கருத்துக்களை பிப்ரவரி 10, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 24, 2023 வரையும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி..!! பட்டப்பகலில் பயங்கர சம்பவம்..!!

Fri Jan 20 , 2023
மதுரையில் காவல் ஆய்வாளர் மீது, ரவுடி குண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பிரபல ரவுடியான கூல்மணி (எ) மணிகண்டன் (30) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அப்பகுதியில் பெரும் ரவுடி போல் வலம் வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய அழகுமுத்து என்பவர் கூல்மணி மீது கொள்ளை வழக்கு ஒன்றை பதிவு […]
WhatsApp Image 2023 01 08 at 1.28.37 PM

You May Like