சூப்பர் வாய்ப்பு… தமிழக அரசு வழங்கும் இரண்டு நாட்கள் அழகு தொழிலில் பயிற்சி…!

Tn Govt 2025

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது.


தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை, பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி. ஒரு மேக்அப் கலைஞரின் பயணம் இங்கே தொடங்குகிறது.இங்கே உங்கள் எதிர்காலம் உருவாகும்.

திருமண & வரவேற்பு மேக்க்அப் லுக், HD,3D, 4D மேக்க்அப் நுட்பங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட் (SFX) மேக்க்அப் கலைகள், இயற்கை தோற்றம் தரும் பருத்த புரோ வலைகள், தோல் உணர்திறன் சோதனை மற்றும் திருத்தம், அதிக நுட்பமுள்ள கண் மேக்க்அப் மற்றும் ஹேர் ஸ்டைலிங், சேலை அணிவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி, தயாரிப்பாளர்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் மேலாண்ம, முழுமையான பயிற்சி (100% ஹான்ட்ஸ்-ஆன்).

மேக்கப் ஆர்வலர்கள், சலூன் தொழில்முனைவோர், அழகு துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 மற்றும் 9360221280, இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: முக்கிய அறிவிப்பு…! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜுன் 14-ம் தேதி வரை கலந்தாய்வு…!

Vignesh

Next Post

புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டம்..! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Tue Jun 3 , 2025
புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் […]
anbumani 2025

You May Like