இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன் இதை கவனிக்க வேண்டும்…! மாணவர்களுக்கு UGC கொடுத்த எச்சரிக்கை…!

UGC case 11zon

திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது.


இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15- ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், திட்டமிடல், ஓட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு, இயன்முறை சிகிச்சை, கட்டிடக்கலை, சட்டம், வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவ சேவை சார்ந்த படிப்புகள் உட்பட பல்வேறு படிப்புகள் திறந்த நிலை மற்றும் இணைய வழியில் பயிற்றுவிக்க அனுமதி கிடையாது.

எனவே, அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக் கழகம், ராஜஸ்தான் சுரேஷ் கியான் விகார் பல்கலைகழகம் ஆகியவற்றில் 2024– 25, 2025– 26 கல்வியாண்டுகளில் இணைய வழி கல்வி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

H-1B விசா புதிய விதி!. ஏற்கனவே உள்ளவர்களுக்கு அல்ல; புதிய விண்ணப்பங்களுக்கு பொருந்தும்!. அமெரிக்க அதிகாரி விளக்கம்!

Sun Sep 21 , 2025
இந்திய தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு பெரிய ஆறுதல் அளிக்கும் வகையில், H-1B கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு, புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே உள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். “நாட்டிற்கு வருகை தருபவர்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் அல்லது இந்தியாவுக்கு செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பு அவசரமாக திரும்பிச் செல்லவோ அல்லது $100,000 கட்டணத்தை செலுத்தவோ தேவையில்லை. $100,000 என்பது […]
978951 trump 1

You May Like