தீராத வயிற்று வலி..!! 50 வயது முதியவரால் கர்ப்பமான 16 வயது சிறுமி..!! அதிர்ச்சி தகவல்..!!

திருவாலங்காடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் திருத்தணி மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த திருவலங்காடு அருகே உள்ளது பரேஸ்புரம் இருளர் காலனி. இந்த காலனியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அவருடைய பெரியம்மா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தீராத வயிற்று வலி..!! 50 வயது முதியவரால் கர்ப்பமான 16 வயது சிறுமி..!! அதிர்ச்சி தகவல்..!!

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சிறுமியை தீவிரமாக விசாரித்ததில், தன்னை கடந்த 6 மதத்திற்கு முன்பு தந்தையின் நண்பர் இராமையா (வயது 50) பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி பெரியம்மாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெரியம்மா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து இராமையாவை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

2K கிட்ஸுகளுடன் ரகளை பன்னும் வெதர்மேன்.!

Fri Nov 4 , 2022
தமிழகத்தில் தற்போது காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில நாட்கள் பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயமுத்தூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கனமழை […]
புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா..?? அடுத்த 4 நாட்களுக்கு..!! மக்களே எச்சரிக்கை..!!

You May Like