வடபழநி முருகன் கோயிலில் வேலை வாய்ப்பு: குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்.. ரூ.50,000 சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க

job 2

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் உப அறநிறுவனமான சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ( TNHRCE Recruitment 2025 )வெளியாகியுள்ளது.


காலிப்பணியிடம்: எழுத்தர், அலுவலக உதவியாலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு: திருக்கோயில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

* எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

* அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மடப்பள்ளி பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அற நிறுவனங்களில் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தேரிந்திருக்க வேண்டும்.

* காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

* திருவலகு பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்

* எழுத்தர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

* அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.

* மடப்பள்ளி பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.

* காவலர் மற்றும் திருவலகு பதவிகளுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36.800 வரை சம்பளம் வழங்கப்படும்.

நிபந்தனை: விண்ணப்பதார்களுக்கு தமிழில் நன்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ மற்றும் https://vadapalaniandavar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்

  • கல்வித்தகுதி சான்றிதழ், மாற்று சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • குடும்ப அட்டையின் நகல்
  • ஆதார நகல்
  • சுயவிலாசமிடப்பட்ட ரூ.,25க்கான தபால் தலை கூடிய உறை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி,
சென்னை-26

Read more: விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால் விமான நிறுவனம் எவ்வளவு இழப்புகளை சந்திக்கிறது தெரியுமா..?


Next Post

கிருஷ்ணர் - ருக்மணி மட்டுமல்ல.. புராணங்களில் காதல் திருமணங்கள் செய்தவர்கள் யார் யார் தெரியுமா..?

Thu Jun 19 , 2025
காதல் இரண்டு பேரை ஒன்று சேர்க்கிறது. அது அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வைக்கிறது. பல காதலர்கள் தங்கள் வாழ்க்கையை திருமணத்துடன் மகிழ்ச்சியாகத் தொடங்குகிறார்கள். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக, சில பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்காமல் போகலாம். இதன் காரணமாக, பல காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். காதல் திருமணங்கள் இப்போதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டன. ஆனால் இந்தத் திருமணங்கள் புதியவை அல்ல. அவை புராணங்களிலும் […]
rukmani krishnaa 2

You May Like