’வாய்தா’ திரைப்பட நடிகை மரண வழக்கு..!! காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

தற்கொலை செய்து கொண்ட ’வாய்தா’ திரைப்பட நடிகை தீபாவின் காதலர் சிராஜுதினிடம் நடத்தப்பட்ட 3 மணி நேர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அதேப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். மேலும், அவர் ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதியன்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் செல்போனை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது தீபா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

’வாய்தா’ திரைப்பட நடிகை மரண வழக்கு..!! காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

இதனைத் தொடர்ந்து தீபாவின் சகோதரர் தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நடிகை தீபா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதும், அந்தக் கடிதத்தில், “ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கைக்கூடவில்லை… அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

’வாய்தா’ திரைப்பட நடிகை மரண வழக்கு..!! காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்றுவிட்டு, ஆட்டோவில் இறங்கி சோர்வாக வீட்டிற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும், தீபா தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை தீபாவின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடக்கூடிய சிசிடிவி காட்சிகளும் வெளியானது. தீபா மரணத்தில், அவரின் காதலர் சிராஜுதீனுடைய நண்பர் பிராபகரன் மீதும் சந்தேகம் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தீபா தற்கொலை செய்து கொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்துப் பார்த்த பிரபாகரனிடமிருந்து, அவரின் ஐபோன் மீட்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவின் காதலர் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிவித்திருந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதனிடம் தீபா வாக்குவாதம் செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக தீபா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

’வாய்தா’ திரைப்பட நடிகை மரண வழக்கு..!! காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!

இந்நிலையில், தீபாவின் காதலர் சிராஜுதினிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதில் தீபாவுக்கு கை மற்றும் கால்களில், சருமம் சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது. தீபாவின் நண்பரான பல் மருத்துவர் நிஷா என்பவர் மூலம் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவரிடம், சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 5 மாதமாக தன்னை ஒருதலையாக நடிகை தீபா காதலித்து வந்ததாகவும், அவருடைய காதலை ஏற்று கொள்ளவில்லை என போலீஸ் விசாரணையின் போது சிராஜுதீன் தெரிவித்துள்ளார். கந்த சில நாட்களாகவே தீபா மனஉளைச்சலில் இருந்ததாக கூறிய சிராஜுதீனிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற போலீசார், தீபாவின் பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பின், இறுதிகட்ட விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சருமப் பிரச்சனைக்கு தீபாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CHELLA

Next Post

பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு..? இம்முறை எவ்வளவு மணி நேரம் வெடிக்கலாம்..?

Mon Sep 26 , 2022
அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வரும் 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி […]
Diwali

You May Like