வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மினி வந்தே பாரத் மெட்ரோ சேவைகள் விரைவில் நாட்டில் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது; வந்தே பாரத் மெட்ரோவின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு இந்த ஆண்டு நிறைவடையும். பெரிய நகரங்களில் உள்ள மக்கள் தங்கள் வேலை செய்யும் இடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு வசதியாக பயணம் செய்ய உதவும் நோக்கத்துடன் வந்தே பாரத் மெட்ரோ சேவைகள் தொடங்கப்படும்.
பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில்கள் விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.