தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது.
காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பீன்ஸ், கேரட், கத்திரிக்காய் விலை கேட்டதும் ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட கால் கிலோ வாங்கி செல்கிறார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வு காரணமாக கிலோ கணக்கில் பீன்சை வாங்கி சென்ற பெண்கள் கால் கிலோ, அரைகிலோ என வாங்கி சென்றதாகவும் வியாபாரிகள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காய்கறி விலை குறைந்தது. 1 கிலோ தக்காளி ரூ10 – ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.25. உருளைக்கிழங்கு ரூ.13 – ரூ.25. இஞ்சி ரூ.35க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக காய்கறிகள் விலை கணிசமாக உயரும் எங்க் கூறப்பட்ட நிலையில், பீன்ஸ், ஊட்டிம் கேரட், வெண்டைக்காய் விலை ரூ.10 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read more: Job: 13-வது கட்ட தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 23-ம் தேதி கடைசி தேதி…!