கோயம்பேடு மார்க்கெட்டில் பாதியாய் குறைந்த காய்கறி விலை..!! குஷியில் சென்னைவாசிகள்..

Vegetable Market

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது.

காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பீன்ஸ், கேரட், கத்திரிக்காய் விலை கேட்டதும் ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட கால் கிலோ வாங்கி செல்கிறார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வு காரணமாக கிலோ கணக்கில் பீன்சை வாங்கி சென்ற பெண்கள் கால் கிலோ, அரைகிலோ என வாங்கி சென்றதாகவும் வியாபாரிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காய்கறி விலை குறைந்தது. 1 கிலோ தக்காளி ரூ10 – ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.25. உருளைக்கிழங்கு ரூ.13 – ரூ.25. இஞ்சி ரூ.35க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக காய்கறிகள் விலை கணிசமாக உயரும் எங்க் கூறப்பட்ட நிலையில், பீன்ஸ், ஊட்டிம் கேரட், வெண்டைக்காய் விலை ரூ.10 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more: Job: 13-வது கட்ட தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 23-ம் தேதி கடைசி தேதி…!

Next Post

UPI கட்டணத்திற்கு கூடுதல் கட்டணம் விதிப்பா?. நிதி அமைச்சகம் பதில்!.

Thu Jun 12 , 2025
UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் […]
UPI Big Changes

You May Like