குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா…! என்ன காரணம்…?

vice president 2025

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என கூறியிருந்தார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக கூறியுள்ளார். தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கவனம்!. நீங்கள் வாங்கிய மொபைல் திருடப்பட்டதா?. இந்த SMS அனுப்புவதன் மூலம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

Tue Jul 22 , 2025
நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இப்போதெல்லாம், திருடப்பட்ட மொபைல் போன்களை சந்தையில் விற்பனை செய்வது ஒரு பொதுவான நடைமுறையாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் அறியாமல் திருடப்பட்ட போனை வாங்குகிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். நல்ல செய்தி என்னவென்றால், இப்போது ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்த ஸ்மார்ட்போனின் உண்மையான அடையாளத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் hastech._ […]
mobile stolen 11zon

You May Like