அரசியல்வாதி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் விக்ரமன்… கிழித்தெடுத்த அசீம்….

தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழிந்த பிறகு தான் போட்டியாளர்களுக்கு மத்தியில் சலசலப்பும், சச்சரவும் தொடங்கும். ஆனால், இந்த முறை முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டை தொடங்கிவிட்டது. அதிலும் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து அசிம், விக்ரமன் இருவருமே சரியாக பேசிக் கொள்வதில்லை.


விக்ரமன் அரசியல்வாதி தோற்றத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார் கடந்த வாரம் கமல்ஹாசனிடம் பேசும்போது கூட தனக்கு இந்த துறை மனிதர்கள் பழக்கம் இல்லை என்றும். நான் வேறு துறையில் இருந்து வந்திருப்பதாகவும், எனக்கு கேளிக்கை வராது எனவும் தெரிவித்தார் விக்ரமன், இதை கேட்ட கமல்ஹாசனும் அரசியலில் இல்லாத கேளிக்கையா என்று கேட்டார்,..

https://www.youtube.com/watch?v=PRo8nYUGAas&t=116s
Subscribe to my YouTube Channel

இது ஒரு பக்கம் இருக்க விக்ரமன் கடந்த 2016ல் செய்தி வாசிப்பாளராக ஒரு தனியார் சேனலில் வேலையில் இருக்கும்போதே, சீரியலில் நடித்தார் இதை அறிந்த அந்த செய்தி சேனல் விக்ரமனை தூக்கிவிட்டது, மேலும் அவர் நடித்த சீரியலும் 29 எபிசோட்களிலில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சீரியல் நடித்த அதே சேனலில் ஒரு கிரைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுவும் சில மாதங்களிலே நிறுத்தப்பட்டது என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் வர, அவர் சீரியலில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

bb s6

சீரியலில் நடித்த ஒருவர் தனக்கு கேளிக்கை வராது என்று கமலிடமே கூறியிருப்பது அவர் எந்த அளவுக்கு ஏமாற்றுவேலைக்கார்ரர் என்பதை தெரிவிக்கறது. பொதுவாக இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவரும் சினிமா மற்றும் சீரியலை சேர்ந்தவர்கள் தான் சிவின் கணேசன், தனலட்சுமி, மாற்று விக்ரமன் இந்த மூவர் மட்டுமே வேறு துறையை சார்ந்தவர்கள். அனால் தற்போது அரசியல் துறை சார்ந்த விக்ரமனுக்கு சினிமா துறை சார்ந்த அனுபவம் இருந்தும் அதை அவர் மறைத்து வருகிறார். இதை ஒரு நாள் கமல் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் என்று சாமூக வலைதளத்தில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி பிக் பாஸ் வீட்டில் ஏமாற்றிக்கொண்டிருக்கும் விக்ரமனை அசீம் கடுமையாக திட்டியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது மகேஸ்வரி, விக்ரமன் மற்றும் ஆயிஷா ஆகியோர் நிற்கும் இடத்தை குறிப்பிட்டு தகுதியே இல்லாதவர்கள் என்றார். இதனால் கடுப்பான ஆயிஷா எதற்காக அப்படி சொல்கிறீர்கள் என கேட்க, போடி என்று எகிறினார் அசீம். அதனால் கோபமான ஆயிஷா செருப்பை கழட்டி இருக்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் கலவரம் ஆகியது.

Subscribe to my YouTube Channel

மேலும் பேசிய அசீம் விக்ரமனை தூங்கிக் கொண்டே இருக்கிறார் என்று கூற, நீ என்ன செய்கிறாய் என்று விக்ரமன் பதில் கேள்வி கேட்கிறார். அப்போது யோவ் நீதான் தூங்கிட்டே இருக்க என்கிறார் அசீம்.அதற்கு யோவ் என்று சொல்லாதே மரியாதையா பேசு என்கிறார் விக்ரமன். உடனே டேய் போடா போய் வேலைய பாருடா என்று கூறும் அசீம், வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு… நீ என்னடா அரசியல்வாதி… எனக்கு புரியல என சரமாரியாக சாடுகிறார். இதனால் கடுப்பாகும் விக்ரமன், ஏய் மரியாதையா பேசு என்று எச்சரிக்கிறார். இருவருக்கும் நடக்கும் இந்த சண்டையால் பிக்பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது. பிறகு அந்த போட்டி முடிந்ததும் ஒருவருக்கொருவர் சமாதானம் ஆகிவிட்டனர். மேலும் விக்ரமன் உண்மை முகத்தை மாரடைத்து வைப்பது அசீம்க்கு தெரிய வரவே இப்படி செய்து இருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

கறி வறுத்த மனைவி., கடுப்பாகி கணவன் செய்த செயலால் பறிபோன உயிர்.!

Sat Oct 22 , 2022
ஆமைக்கறி வறுவல் லேசாக கருகி விட்டது என்பதற்காக மதுபோதையில் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் செய்த செயல் ரவுத்பாரா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ரஞ்சன் பாடிங் என்பவர் ஒடிசா மாநிலத்தில் சம்பால்பூர் மாவட்டம் ரவுத்பாரா கிராமத்தில் அவரின் மனைவி சாவித்திரியுடன் வசித்து வந்தார் . சில தினங்களாக தன் மனைவி காணாமல் போய்விட்டதாக சொல்லி வந்திருக்கிறார். இந்நிலையில், தன் மகளுக்கு என்ன ஆனது என்று விசாரணை நடத்தி […]
Death

You May Like