”இதை யார் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள்”..!! உதயநிதி ஸ்டாலின் தடாலடி..!!

தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழியை 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். அதைபோல், இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலை குறைக்கப்படும். முதல்வரின் திட்டங்களில் சிறப்பான திட்டமாக நாடே போற்றும் திட்டமான காலை உணவு திட்டம் மற்றும் மகளிர் உரிமை திட்டம் போன்றவை மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், நமது முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம், மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால கூடுதல் தொகை ஆகியவற்றை பெற்று தந்தவர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி . அந்த உரிமையில் உங்களிடம் வாக்குகளை கேட்கின்றோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் ஆறுதல் கூட தெரிவிக்க வராத பிரதமர் மோடி தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார்.

தமிழ்நாடு மக்களை யார் மதிக்கின்றார்களோ, தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 40/40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும்” என்றார்.

Read More : இன்று 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

Chella

Next Post

”தேர்தல் முடிந்ததும் இலவச வீட்டுமனை பட்டா”..!! சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழச்சி தங்கபாண்டியன்..!!

Sat Apr 13 , 2024
இலவச வீட்டுமனை பட்டா குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையின் ஒட்டியம்பாக்கம் பகுதி மக்களுக்காகவே, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் இந்த மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு, மக்களை வரவிடாமல் தமிழக அரசு தடுத்துவிட்டதாக தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு, அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் காட்டமாக பதிலளித்திருந்தார். “இது […]

You May Like