சுத்தமான உணவு முறையை கண்டிப்பாகப் பின்பற்றிய 29 வயதுப் பெண்ணுக்கு சமீபத்தில் 4 ஆம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 30ம் தேதி மோனிகா சவுத்ரி என்ற பெண், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடித்தும் புற்றுநோய் எப்படி பாதித்தது என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஆரோக்கியமான உணவு மட்டுமே கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்று நினைக்கும் பலருக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது.
தனது ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் இருந்தபோதிலும், வேலையின் தேவைகள் எவ்வாறு தனது நல்வாழ்வை ரகசியமாக பாதித்தன என்பதை சவுத்ரி பகிர்ந்துள்ளார். நீண்ட நேரம் வேலை செய்வது, அதிகப்படியான திரை நேரம், கடைசித் தேதி அழுத்தங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை நோய் பாதிப்புக்கு காரணம் என்று அவர் கூறினார், இது படிப்படியாக தனது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனது ஆரோக்கியத்தில் நான் எப்போதும் கவனம் செலுத்துவேன். நான் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணும் பழக்கம் கொண்டிருந்தேன். எண்ணெய் மற்றும் பொரியல் போன்ற உணவுகளை விரும்பமாட்டேன். நான் எனது வலைத்தளத்தில் வேலை செய்யத் தொடங்கியபோது, அது எவ்வளவு கடினமானதாகவும், அனைத்தையும் உட்கொள்ளும் தன்மையுடனும் மாறும் என்பதை நான் உணரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது உட்கார்ந்த வாழ்க்கை முறை, குறைந்தபட்ச உடல் செயல்பாடு மற்றும் அரிதான வெளிப்புற பயணம் முன்பு பின்பற்றிய சீரான வாழ்க்கை முறையிலிருந்து விலகுவதை வழக்கமாக மாற்றியது. “இது நான் முன்பு கொண்டிருந்த வாழ்க்கை முறையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாகும் . நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். மாலை உடற்பயிற்சி எனது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அவை எனக்கு ஓய்வும், சிகிச்சையும் போன்றவை.
நான் வேலையில் அதிக நேரம் மூழ்கியதால், என் ஆரோக்கியத்தை புறக்கணித்து விட்டேன். ‘விரைவில்’ மீண்டும் அதைத் தொடங்குவேன் என்று சொன்னேன். ஆனால் அந்த ‘விரைவில்’ என்ற வார்த்தை ஒருபோதும் வந்தது இல்லை,” என்று அவர் சோகமாக கூறினார். வேலை தேவைகள் அதிகரித்ததால், தொடர்ந்து தனது உடல்நலத்தை விட தனது வேலைக்கு முன்னுரிமை அளித்துள்ளார் அந்த பெண். பின்னர் அவற்றை மீண்டும் தொடங்குவதற்காக தனது சுய பராமரிப்பு வழக்கங்கள் பின்பற்ற மீண்டும் மீண்டும் தாமதம் ஏற்பட்டது.
இதனால், உடல் சோர்வு, பதட்டம் மற்றும் அசௌகரியம் போன்ற எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியதைக் கவனித்தாள். இருப்பினும், இந்த அறிகுறிகளுக்கு வேலை அழுத்தம் அல்லது தூக்கமின்மை காரணம் என்று கூறி, அடிப்படை பிரச்சினைகளைப் புறக்கணித்தாள். இதையடுத்து, சோதனையில் சௌத்ரிக்கு 4 ஆம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் அவரது வாழ்க்கை அதிர்ச்சியூட்டும் திருப்பதை கொடுத்தது.
இது எல்லாவற்றையும் மாற்றிய ஒரு அதிர்ச்சியூட்டும் தருணம். தனது அனுபவத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, தனது நிலை வெறும் துரதிர்ஷ்டம் அல்ல என்பதை இப்போது அவர் புரிந்துகொண்டுள்ளார். மாறாக, மன அழுத்தம், சோர்வு மற்றும் நீண்டகால உடல் புறக்கணிப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவுகளே இதற்குக் காரணம் என்று அவர் கூறுகிறார்.