உஷார்.. இன்று முதல் வரும் 11-ம் தேதி வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..


வரும் 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. கரூர், பரமத்தியில் அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RUPA

Next Post

மனைவி, குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..? திடுக்கிடும் தகவல்..!!

Fri Apr 7 , 2023
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு (34). இவர் கடந்த 2021இல் இங்கிலாந்தில் கெட்டரின் பகுதியில் இருக்கும்போது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக தன் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஞ்சு அசோக், அவரது மகள்கள் ஜீவா (6), ஜானகி (4) ஆகியோர் […]
மனைவி, குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..? திடுக்கிடும் தகவல்..!!

You May Like