இனிப்பு மற்றும் காரவகை ஸ்நாக்ஸ்களில் அதிகளவில் மைதா மாவு கலக்கப்படுவதால் பவேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது. அதன்படி மைதா மாவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் அனைத்துமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது.மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் செய்யப்படுகிறது. பெரும்பாலும் கோதுமை மாவு சற்று மஞ்சள் நிறமாகவே இருக்கும். இதற்கு ஒரு சில இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மைப்படுத்தி மைதா மாவை தயாரிக்கின்றனர். இதை தவிர மாவை சுவையூட்ட இரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை என ஏராளமான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆகவே தான் இந்த மைதா மாவில் எந்த ஒரு சத்தும் கிடையாது என்று கூறுகின்றார்கள்.
மைதா மாவை உட்கொள்வதால், இரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரிக்கும். எழும்பை அரித்து விடும். பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடற் பருமனை அதிகரிக்கின்றது.
ஜீரண பிரச்சினைகளை தருகின்றது. இதய கோளாறு ஏற்படும். மலச்சிக்கலை ஏற்படுத்தும் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வகையான தீமையை ஏற்படுத்தும் மைதா மாவை உண்பதற்கு பதிலாக கோதுமை மாவை உட்கொள்ளலாம். மைதாவுடன் ஒப்பிடும் பொழுது கோதுமை மாவிற்கு நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.