எதோ ஒன்று தேட போய் ஒருமணி நேரம் ஆன பிறகு தான் நியாபகத்துக்கு வரும் நாம் தேடிவந்தது எது என்று, அப்படி பலரின் நேரத்தை செலவழிக்கும் சமூகவலைத்தளத்தில் ஒன்று தான் டிவிட்டர். இதில் பொதுவாக பகிரப்படுவது GUESS WHO-னு ஒரு தலைப்பு தான். பிரபலாமனவர்களின் சிறு வயது புகைப்படங்கள் போன்றைவை பகிறப்பட்டு இவர் யார் என்று கண்டுபுடியுங்கள் என்று கேட்பது தான் GUESS WHO. ஆனால் ஒரு தனியார் தொலைக்காட்சி பக்கத்தில் இதுபோல பகிரப்பட்ட ஒரு பதிவை கமெண்ட்களால் வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அப்படி என்ன பதிவு அது.
சமீபத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள விர்ச்சுவல் ரியாலிட்டி படமான லி மஸ்க்கின் சிறப்பு காட்சியை சூப்பர் ஸ்டாருக்காக திரையிட்டுள்ளனர். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியுடன் படத்தை ரசித்த ரஜினியின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமிலும் பதிவிட்டனர்.
விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி மாட்டிக்கொண்டு ரஜினி எடுத்த புகைபடத்தை GUESS WHO-னு கேட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்து காண்டான நெட்டிசன்களில் ஒருவர் “guess who வா! விட்டா அவர் மூஞ்சிய க்ளோஸா ஒரு போட்டோ எடுத்து கூட guess who கேட்ப போல? அவ்ளோ நக்கலா ஆகிட்டாரு இந்த மனுஷன்!” என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் “ஒருத்தன் உக்காந்துட்டு இருக்குற தினுச பார்த்தாலே சொல்லிடுவேன்… அவன் ரத்தம் பார்த்தவனா இல்லையான்னு” என்று ரஜினகாந்தின் பேட்டை பட வசனத்தை போட்டு பதிவிட்டுள்ளார்.
இவரோ “மன்னிக்கவும் யூகிக்க முடியவில்லை… மிகவும் கடினமான கேள்விகள்.. சில குறிப்புகள் கொடுங்கள் என்று கிண்டலடித்துள்ளார். இது போல பலரும் அந்த பதிவை கிண்டலடித்து வருகின்றனர்.