’’நாம் ஒன்றாக சேர்ந்து பயணத்தை தொடங்குவதற்கு இனியும் காத்திருக்க முடியாது’’… பிரபல நடிகர் காதலில் விழுந்தார்…

தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்ற பெயரை பெற்று பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக்தான் காதலில் விழுந்துள்ளார்..

பேச்சாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு பாணியை கொண்டிருந்தவர் நடிகர் கார்த்திக். பல ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தந்தையின் ஆசீயோடு ’கடல்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து வை ராஜா வை, ரங்குன், தந்திரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றார்.

gauthamkarthik manjimamohan main1 1992022 tile 1663605159

கவுதம் கார்த்திக் உடன் தேவராட்டம் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மஞ்சு மோகன். அந்த படத்திற்கு பின்னர் இருவருக்குள்ளும் காதல் பூ பூத்துவிட்டது. இதுவரை ரசிகர்கள் மட்டுமே கூறி வந்த நிலையில் தற்போது கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் தங்கள் காதலை வர்ணித்து அழகாக வெளிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

gouthamkarthi manjima

சரியான நபர் நம் வாழ்க்கையில் வரும் போது பெரும்பாலான மக்கள் காதலில் விழுந்துவிட்டாய் என கூறுவார்கள். அப்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கும். நம் இதயத்தில் பட்டாம்பூச்சி பறக்கும். மகிழ்ச்சியில் இதயம் பாடல் கூட பாடும்…

நமது பயணம் கண்டிப்பாக வித்தியாசமான ஒன்று. நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ப்ராங்க் செய்து கொண்டோம்.. எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம். முட்டாள்தனமான விஷயத்திற்கு வாக்குவாதம் செய்வோம். நண்பர்களால் கூட அதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால், இவை ஒரு அழகான பிணைப்பை உண்டாக்கும் என்பது தெரியாது. இந்த பந்தத்திற்கு ’நட்பு’ என பெயர் வைக்க முடிவெடுத்தேன. ஆனால் அதை விட வலிமையாக இருந்தது. வளர்த்துக் கொண்டே சென்றீர்கள், சிறந்த நண்பர்கள் என பெயர் வைத்தேன். அது அதை விட வலுவானது. நாளுக்கு நாள் வலுவாக வளர்த்தீர்கள். நான் மோசமான நிலையில் இருந்த போது என் பக்கத்தில் இருந்தீர்கள். நான் நம்பிக்கையை இழக்கவில்லை. என் வாழ்வில் என்னை முன்னோக்கி தள்ளினீர்கள்… என்றெல்லாம் அழகாக வர்ணித்து காதலை வெளிப்படுத்தி ’’ நாம் ஒன்றாக சேர்ந்து பயணத்தை தொடங்குவதற்கு இனியும் காத்திருக்க முடியாது’’ என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CkYLNwBvDF9/?utm_source=ig_web_copy_link

Next Post

’வேலை கிடைத்தால் உயிரை காணிக்கையாக்குகின்றேன்’… வேலை கிடைத்த மகிழ்ச்சியில் உயிரைவிட்ட இளைஞர்…

Mon Oct 31 , 2022
வேலை கிடைக்காத விரக்தியில் நேர்த்திக்கடனாக உயிரை தருகின்றேன் என வேண்டிக் கொண்ட இளைஞர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த நவீன் என்பவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை எடுத்து வாசித்த போது, […]
Train 1 1

You May Like