மாரடைப்பு என்பது முதியவர்களை தாக்கிய நிலை மாறி, இப்போது எந்த நேரத்திலும், யாருக்கும், எங்கும் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது தான். அதிலும், புதிய வகை மாரடைப்பு சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? அமைதியான மாரடைப்பு அதாவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது “myocardial infarction” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியாது, இது குறைந்தப்பட்ச அல்லது அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒரு வகை மாரடைப்பு ஆகும்.
அறிகுறிகள்: தெளிவான அறிகுறிகள் தெரியாததால் சைலண்ட் ஹார்ட் அட்டாக் கவனிக்கப்படமால் போகிறது. ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில கவனிக்கத்தக்க அறிகுறிகள் சைலண்ட் ஹார்ட் அட்டாக் வருவதை உணர்த்தும் என்கின்றனர். எனவே இதை அடையாளம் காண்பது சவாலானது.
மார்பில் அழுத்தம்: பொதுவான மாரடைப்பின்போது மார்புப்பகுதியில் தீவிர வலி இருக்கும். ஆனால், சைலண்ட் அட்டாக் வரும்போது மெலிதான வலி மற்றும் நடு மார்பில் அசௌகர்யம் ஏற்படும். மேலும், மார்புப்பகுதியில் சிரிது அழுத்தம் மற்றும் மார்பை பிழிவது போன்ற உணர்வு ஏற்படும். இவை நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக்கோளாறின் அறிகுறிகளாகவும் இருப்பதால் பெரும்பாலானோர் குழப்பமடைகின்றனர்.
அசௌகர்யம்: மார்புப்பகுதியை தவிர, சைலண்ட் அட்டாக் வருவோருக்கு முதுகு, கைகள், வயிறு, கழுத்து மற்றும் தாடைப்பகுதிகளிலும் அசௌகர்யத்துடன் கூடிய வலி இருக்கும்.
மூச்சுவிடுவதில் சிரமம்: சைலண்ட் அட்டாக் ஏற்பட்டோருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற உணர்வுகளும் ஏற்படலாம் என்கின்றனர். இந்த அறிகுறிகள் நீண்ட நேரத்திற்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
குளிர்ந்த வியர்வை: இது சைலண்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறி என்றே சொல்லலாம். காய்ச்சல் வந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால், அது நீண்ட நேரத்திற்கு நீடிக்காது. ஏனெனில், இந்த குளிர்ந்த வியர்வை வேகமாக காணாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற உணர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
Read more: 130 ஆபாச வீடியோக்கள்.. இளம் பெண்களுடன் கட்டி புரண்ட பாஜக மூத்த தலைவரின் மகன்..!! வலுக்கும் கண்டனம்