தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது..
இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.. அந்த வகையில் நேற்று திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது..
தனது 20 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.. தேமுதிகவுக்கு 7 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்க திமுக உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பட்டியலிட்டு தேமுதிக திமுக தலைமையிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதில் இருந்து 7 தொகுதிகளை வழங்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..
அதன்படி, கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கேவி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக கொடுத்துள்ளதாம்..
அதே போல் வேட்பாளர்களும் தயாராகவே வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்தும், சிவகாசி, விருதுநகர், சிவகாசி இந்த 3 தொகுதிகளில் ஒன்றில் விஜய பிரபாகரனும், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதியும், விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி எல். வெங்கடேசனும், பல்லாவரத்தில் அனகை டி. முருகேசனும். சேலம் தெற்கில் அழகாபுரம் மோகன் ராஜும் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது..
அதே போல் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு, அக்கட்சியின் பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே. சுதீஷ் தேர்வு செய்யப்படுவார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
Read More : டபுள் ஜாக்பாட்..!! மீண்டும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.4,000..? திமுக அரசு போட்ட மெகா பிளான்..!!



