G pay பயனாளர்களுக்கு ₹88000/- ரூபாய்! தவறாக அக்கவுண்ட் மாற்றி அனுப்பிய கூகுள் பே! அச்சத்தில் பயனாளர்கள்!

இணையதளத்தின் வழி பணி பரிமாற்றத்திற்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பே என்ற செயலி 88 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலப்பேரின்

வங்கி கணக்குகளுக்கு தவறாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கூகுள் பே செயலி பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். இது பயன்படுத்துவதற்கும் எளிது எந்த நேரத்திலும் யாருக்கும் பணம் அனுப்பவும் செய்யலாம் பணம் பெற்றுக் கொள்ளவும் உதவும். இத்தய கூகுள் பே நிறுவனத்தில் தான் தற்போது ஒரு தவறு நடந்திருக்கிறது அந்தத் தவறின் காரணமாக ₹ 88000/- ரூபாய் பணம் சில வங்கி கணக்குகளில் தவறாக செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


அந்த செயலியில் ஏற்பட்ட சில தவறுகளால் பல வங்கி கணக்குகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 88 ஆயிரம் ரூபாய் வரை சென்று இருக்கிறது. பின்னர் இதனை கண்டறிந்து சரி செய்த கூகுள் பணம் செலுத்திய கணக்குகளிலிருந்து பணத்தை மீண்டும் திரும்ப எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக யாருடைய வங்கி கணக்கிற்கு எல்லாம் தவறுதலாக பணம் அனுப்பப்பட்டதோ அவர்களின் வங்கி கணக்கிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அந்த மின்னஞ்சலில் எங்களால் பணத்தை உங்களிடமிருந்து திரும்ப எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அந்த பணம் உங்களுக்கானது என குறிப்பிட்டு இருக்கிறது. கூகுள் பே செயலியில் இப்படி ஒரு தவறு ஏற்பட்டு பணம் தவறுதலாக பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதன் பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1newsnationuser5

Next Post

"மாமனார் 2 ஆம் திருமணம் செய்தால் சொத்து பிரச்சனை வரும்" மருமகளை இரும்பு கம்பியால் அடித்தே துடிதுடிக்க கொன்ற மாமனார்!

Mon Apr 10 , 2023
திருநெல்வேலி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரே மருமகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இடப்பேரி பகுதியைச் சார்ந்தவர் தங்கராஜ் வயது 56. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் மருமகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 33 இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்துமாரி. தமிழ்செல்வன் மற்றும் […]
IMG 20230410 WA0415

You May Like