இணையதளத்தின் வழி பணி பரிமாற்றத்திற்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பே என்ற செயலி 88 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலப்பேரின்
அந்த செயலியில் ஏற்பட்ட சில தவறுகளால் பல வங்கி கணக்குகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 88 ஆயிரம் ரூபாய் வரை சென்று இருக்கிறது. பின்னர் இதனை கண்டறிந்து சரி செய்த கூகுள் பணம் செலுத்திய கணக்குகளிலிருந்து பணத்தை மீண்டும் திரும்ப எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக யாருடைய வங்கி கணக்கிற்கு எல்லாம் தவறுதலாக பணம் அனுப்பப்பட்டதோ அவர்களின் வங்கி கணக்கிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அந்த மின்னஞ்சலில் எங்களால் பணத்தை உங்களிடமிருந்து திரும்ப எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அந்த பணம் உங்களுக்கானது என குறிப்பிட்டு இருக்கிறது. கூகுள் பே செயலியில் இப்படி ஒரு தவறு ஏற்பட்டு பணம் தவறுதலாக பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதன் பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.