Samantha: சமந்தாவுக்கு என்ன ஆச்சு?… படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!

Samantha: தசை அழற்சி காரணமாக சிட்டாடல் படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தன் நண்பருடனான உரையாடலில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தசை அழற்சி என்ற அரியவகை பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார். இந்தப் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்திருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, உடல் ஆரோக்கியம் குறித்து, பாட்காஸ்டில் தன் நண்பருடன் அவர் பேசி வருகிறார்.

அதில் தசை அழற்சி காரணமாக சிட்டாடல் படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தசை அழற்சி நோய் காரணமாகப் படப்பிடிப்பு கடினமாக இருந்தது. குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Readmore: 800 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் தயார்!… பேச்சுவார்த்தையில் முடிவு!

Kokila

Next Post

Women Jallikattu: இனி பொங்கல் பண்டிகைக்கு மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டி!… ஆர்வம் காட்டும் மாணவிகள்!

Mon Mar 25 , 2024
Women Jallikattu: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி.கே.டி.பாலன் கூறியுள்ளார். பொங்கல் பண்டிகை நாட்களில்மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் வெளிநாட்டினர் வரை ஆர்வமாக வருகின்றனர். இதுவரை காளைகளை வளர்ப்பது, பயிற்சி அளிப்பது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு காளைகளை அழைத்து வந்து வாடிவாசலில் அவிழ்த்துவிடுவது, […]

You May Like