”நான் செய்தது தவறுதான்”..!! உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘பொன்முடிக்கு பதவியேற்பை ஆளுநர் நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாளை (இன்று) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம். இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடியை பதவியேற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். இந்நிலையில், பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டுள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்ட தகவல் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Read More : Candidates | தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!! தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் வெயிட்டிங்..!!

Chella

Next Post

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது - கர்நாடக பாடகிகள் கடும் எதிர்ப்பு

Fri Mar 22 , 2024
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதற்கு கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதற்கு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளிக்கு, கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தை அவர்கள் […]

You May Like