ஆளுநர் என்ன கட்சிக்காரரா..? செல்லாது செல்லாது..!! கொளுத்திப்போட்ட செல்லூர் ராஜூ..!!

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில், திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடி இருந்தார். அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணத்தையும் ஆளுநர் ரவி விமர்சித்திருந்தார். அத்துடன் தமிழ்நாடு அரசால் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் சட்ட திட்டங்களையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இப்படியாக ஆளுநரின் செயல் தொடர்ந்து அடாவடி தனமாக இருப்பதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ”தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சி பிரதிநிதிபோல பேசி வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் அவராக பேசுகிறாரா இல்லை, அறிக்கையை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. ஆளும் கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்க முடியாது. ஆளுநர் ஆளுங்கட்சி மோதலால் மக்களின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். 

CHELLA

Next Post

மின் கட்டணம் யாருக்கு உயர்வு…..? யாருக்கு இல்லை முழு விவரம் இதோ…..!

Thu Jun 8 , 2023
தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது புதிய மின் கட்டணத்தின் படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டதால் மின் கட்டணத்தை செலுத்த இயலாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் மின்சார வாரியத்திற்கு 1,65000 கோடி கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் எதிர்வரும் 5 வருடத்திற்கு ஆண்டுக்கு 6%முதல் 5 வருடங்களில் […]
TNEB Office

You May Like