தமிழக அரசுமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால்
மக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் போதையில்லா தமிழ்நாட்டை உருகூாக்கும் வகையில் மாரத்தான் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ’ தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் , மக்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும். 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மருந்து தட்டுப்பாடு குத்த புகாரை அளிக்கலாம் . தமிழ்நாட்டில் போதைப் பொருள் குறைந்துள்ளது. இதுவரை 169 டன் பான்பராக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுகின்றது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில் மருந்து தட்டுப்பாடு என்ற மாயத் தட்டுப்பாடு தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் உண்மையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாட்டின் 32 கிடங்களில் எவ்வளவு மருந்து உள்ளதுஎன்பதை யார் வேண்டுமானாலும் அறியலாம். தைரியமாக முன் வந்து 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.என்றார்.