இனி இந்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. எந்தெந்த மாடல் தெரியுமா..?

whatsapp jpg

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மெசஞ்சர், இனி சில பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த மாற்றம் மே 2025-ல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் ஏற்பட்ட சிறிய தாமதம், பயனர்களுக்கு தங்கள் போன்களை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசத்தை அளித்தது. அதன்படி ஜூன் 1 முதல் சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படவில்லை. இது மெட்டாவின் வழக்கமான புதுப்பிப்பின் ஒரு பகுதியாகும். அதாவது, வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த தேவையான குறைந்தபட்ச நிபந்தனைகளை உயர்த்துகிறது.


வாட்ஸ்அப் செயலி இயங்காத ஸ்மார்ட்போன்களின் பட்டியல்: ஐபோன் 5s, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்இ (முதல் தலைமுறை), சாம்சங் கேலக்ஸி எஸ்4, சாம்சங் கேலக்ஸி நோட் 3, சோனி எக்ஸ்பீரியா இசட்1, எல்ஜி ஜி2, ஹவாய் அசென்ட் பி6, மோட்டோ ஜி (முதல் தலைமுறை), மோட்டோரோலா ரேஸர் எச்டி, மோட்டோ இ 2014.

உங்கள் தொலைபேசி இந்த பட்டியலில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

மொபைல் மேம்பாடு முக்கியம்: புதிய iPhone SE (2வது அல்லது 3வது ஜெனரேஷன்) அல்லது நடுத்தர விலையில் கிடைக்கும் Android மாடல்களைப் பெறலாம். அவை iOS 15.1 மற்றும் Android 5.1-க்கு மேல் இயங்கும்.

OS ஐப் புதுப்பிக்கவும்: System Update சென்று, புதிய OS பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.

சார்ட் சேமிப்பு: உங்கள் WhatsApp அரட்டைகளை iCloud (iPhone) அல்லது Google Drive (Android) இல் சேமிக்கவும். அமைப்புகள் > அரட்டைகள் > அரட்டை காப்புப்பிரதி என்பதற்குச் செல்லவும்.

மாற்று செயலி: தற்போது WhatsApp செயலிழக்கும் என்று தெரிந்தால், Telegram அல்லது Signal போன்ற மெசேஜிங் செயலிகள் பழைய சாதனங்களிலும் இயங்க வாய்ப்பு உள்ளது.

Apple வெளியிட்டுள்ள 2024 தரவுகளின்படி, உலகளவில் கிட்டத்தட்ட 5% iPhone-களே iOS 15 அல்லது அதற்கு மேல் இயங்குகின்றன. எனவே, சில நாடுகளில் இதன் தாக்கம் குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தியா போன்ற சாதனங்களை நீண்டகாலம் பயன்படுத்தும் நாடுகளில், இந்த மாற்றம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read more: தங்கம் விலை இனிமேல் இப்படி தான் இருக்கும்.. அடித்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்..!!

Next Post

ஷாக்!. கொரோனா 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடூரமாக இருக்கும்!. எதிர்த்து போராட எந்த வசதிகளும் இருக்காது!. பகீர் கணிப்பு!

Tue Jun 3 , 2025
நடப்பாண்டில் கோவிட்-19 மீண்டும் பரவுவது கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடிய அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, அரசாங்கம் பொதுமக்களிடம் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா முதன்முதலில் 2019 ஆம் […]
2030 corona panic

You May Like