குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணையின்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. குரூப் 4 தேர்வும் ஜுலை மாதம் குரூப் 4 தேர்வு ஜுலை மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளுக்கும் தேர்வர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். குறைந்த பட்சம் குரூப் 2 தேர்வு முடிவுகளாவது வெளியாகியிருக்க வேண்டும்.
தேர்வர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவியது தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததற்கான காரணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கான 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு பதில் கிடைமட்ட நகர்வு முறை பின்பற்ற வேண்டும். என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புது நடைமுறைப்படி பெண்களின் முதலில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு , மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும். இந்த புதிய நடைமுறையின்படி தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதால் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் என கூறப்பட்டது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி . அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.