தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொதுத் தேர்வில் 94. 03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 97.85% விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் 326 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம் போல இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் பேச்சு பெற்றிருக்கிறார்கள் ஒட்டுமொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் தான் தமிழகத்தில் மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொது தேர்வை 9,76,089 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் 1 இரண்டு மதிப்பெண் கேள்விக்கும் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.