திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும். குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும். திருப்பத்தூர் ஆம்பூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும். நல்லகொண்டா பகுதியில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
தமிழத்தில் சமச்சீராக தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் நகர பகுதிகள் போலவே கிராம பகுதிகளும் வளர்ச்சி பெறுகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் தமிழ்நாட்டின் பங்கு தான். வரும் 2026 சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, 2031 மற்றும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலிலும் நம்ம ஆட்சி தான் நடக்கும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டே மாதத்தில் அதாவது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read more: குட்நியூஸ்.. இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி.. விரைவில் புதிய போர்டல்..