சரஸ்வதி தேவிக்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தனி கோவில்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரம்ம தேவரின் துணைவியாக போற்றப்படும் சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் ஆகியவற்றிற்கான தெய்வமாக போற்றப்படுகிறாள். பிருகு முனிவர் அளித்த சாபத்தால் சரஸ்வதி தேவிக்கு பூலோகத்தில் கோவில்களோ, வழிபாடோ இல்லாமல் போனதாக என புராணக் கதைகள் சொல்கின்றன. ஆவால் சரஸ்வதி தேவிக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தவி ஆலயங்கள் உள்ளன. சரஸ்வதி தேவி கோவில்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் அமைந்துள்ள சரஸ்வதி தேவி கோவில் மிகவும் வித்தியாசமானது. அழகான கட்டிட கலையுடன் இக்கோடில் தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
தொடார்ந்து, Rராஜஸ்தானின் பிலானி என்னும் இடத்தில் 7 அடி உயரத்தில் வெள்ளி நிற பளிங்கு கற்களால் சரஸ்வதி தேவிக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பிர்லா மந்திர் என அழைக்கப்படும் 70 தூண்களைக் கொண்ட இக்கோவிலில் சரஸ்வதி தேவியே பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறாள்.
காஷ்மீர் : காஷ்மீர் மாநிலம் நீலம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி தேவி ஆலயம் மிக பழமையானதாகும். இந்த கோவிலில் நான்கு வாசல்கள் இருந்தாலும் தெற்கு வாசல் வழியாக யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது. இந்த தெற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்ற ஒரே நபர் ஆதிசங்கரர் மட்டுமே.
கர்நாடகா : கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதியை ஒரே சொரூபமாக ஸ்ரீசக்கரத்தின் மேல் ஸ்தாபனம் செய்தார் ஆதிசங்கரர். ஸ்ரீசக்கரத்தின் மீது அமைக்கப்பட்ட சிம்மாசனத்தில் சாரதாம்பாள் என்னும் திருநாமத்துடன் சரஸ்வதி தேவி அருள் செய்கிறாள்.
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் கோதவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாசர் என்ற இடத்தில் ஞான சரஸ்வதி என்ற திருநாமத்துடன் சரஸ்வதி தேவிக்கு கோடில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் வந்து வணங்கி செல்லும் கோவிலாக இது உள்ளது.
கேரளா: கேரள மாநிலம் கோட்டயம் அருகிலுள்ள விஷ்ணு தலத்தில் தட்சிண மூகாம்பிகா என்னும் பெயரில் சரஸ்வதி தேவிக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
Read more: திருமணமான மகளுக்கு இந்த 3 பொருட்களை ஒருபோதும் கொடுக்க கூடாது..!! வாஸ்து சொல்றத கேளுங்க..