எந்த ராசி, நட்சத்திரத்திற்கு எந்த ஆலயம் செல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். 12 ராசிகளை நம் முன்னோர்கள் நெருப்பு, நிலம், நீர், காற்று என நான்கு வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 ராசிகள் என 4 பிரிவில் தலா 3 ராசிகள் உள்ளன.
நெருப்பு ராசிகள்: மேஷம், சிம்மம்,தனுசு
நிலம் ராசிகள்: ரிஷபம், கன்னி,மகரம்
காற்று ராசிகள்: மிதுனம், துலாம், கும்பம்
நீர் ராசிகள்: கடகம் , விருச்சிகம் , மீனம்
ராசி என்பது நவகிரகங்களில் சூரியன் அல்லது சந்திரன் அல்லது மற்ற கிரகங்கள் எந்த ராசியில் வலிமை பெறுகின்றனவோ, அதன் அடிப்படையில் அமைகின்றது. நமக்குரிய ராசியும், லக்கினமும், அதற்குரிய கோயில்களில் வழிபாடுகள் செய்தால், வாழ்க்கையின் பல திசைகளிலும் நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.
உங்களது ராசி நெருப்பு, காற்று, நீர், நிலம் அல்லது ஆகாயம் எனும் பஞ்சபூதங்களில் எதனுடன் தொடர்புடையதோ, அதற்குரிய பஞ்சபூத ஸ்தலத்திற்குச் சென்று தரிசனம் செய்வது லக்ன தோஷங்களை தணிக்க உதவும். உதாரணமாக உங்கள் ராசி மகரம் என்றால், இது நிலம் ராசி. அதற்குரிய பஞ்சபூத ஸ்தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில். அங்கு ஒரு தீவிர வழிபாடு உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும்.
நிலம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் ( Ekambareswarar Temple )
நீர்: திருவானைக்காவல் – ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் திருவானைக்காவல் (Jambukeshwarar Temple, Thiruvanaikaval)
நெருப்பு: அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை ( Arunachaleswara Temple )
காற்று: ஸ்ரீ காளஹஸ்தி திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ( SriKalahasti temple )
ஆகாயம்: சிதம்பரம் நடராசர் கோயில் (Nataraja Temple, Chidambaram)
சனி எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ, அந்த ராசிக்குரிய கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. அப்படி செய்தால் உங்களின் தொழில், வியாபார முன்னேற்றம் ஏற்படும். அதே போல உங்களுக்கு என்ன தசா நடக்கின்றதோ, அந்த தசாநாதனுக்குரிய ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
Read more: எமனாக மாறிய பிரிட்ஜ்.. கம்ப்ரசர் வெடித்து கடையின் உரிமையாளர் உயிரிழப்பு..!! மயிலாடுதுறையில் சோகம்