நடிகர் கிருஷ்ணாவின் Whatsapp குழுவில் இருந்தவர்கள் யார்..? போலீஸ் கையில் லிஸ்ட்.. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்..!!

actor krishna

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் கிருஷ்ணா தனது வக்கீல் மூலம் காவல்துறையிடம் ஆஜரானார். மேலும் கிருஷ்ணாவின் செல்போனில் 2020 முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாட்ஸ் ஆப் உரையாடலில் நடிகர் கிருஷ்ணா ஒரு சில நண்பர்களுடன் Code Wordல் தகவல் பறிமாற்றம் செய்தது தெரியவந்தது. இந்த Code Word குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் 20 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குழுவை கிருஷ்ணா நடத்தி வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் எந்த இடத்தில் எந்த நேரத்தில் பார்ட்டி நடக்கும் என குறிப்பிட்டு வந்துள்ளனர். தற்போது அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த அவரது நண்பர்கள் யார் யார் என பட்டியலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். திரைத்துறையை சேர்ந்த மற்றும் அவரது கல்லூரி கால நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோர் அந்த குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் பயன்பாட்டிற்காக பலமுறை இந்த குழுவில் இருந்தவர்கள் பார்ட்டியில் சந்தித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் குழுவில் இருந்த கிருஷ்ணாவின் நண்பர்கள் ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

Read more: திமுக கூட்டணியில் பாமக? ராமதாஸை சந்தித்த பின் செல்வ பெருந்தகை சொன்ன பதில்..

Next Post

ஜெகந்நாதர் ரத யாத்திரையில் வெறித்தனமாக ஓடிய யானைகள்.. பலருக்கு காயம்.. வீடியோ

Fri Jun 27 , 2025
அகமதாபாத்தில் நடந்த ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது, ​​ஊர்வலத்துடன் வந்த யானைகள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால், அங்கிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத யாத்திரையின் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய யானைகளை மீண்டும் கட்டுப்படுத்த யானைப் பாகன்கள் போராடுகின்றனர். ஆனால் மக்கள் பீதியில் சிதறி ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த யானைகளில் […]
474968 yar 1

You May Like